Posts

லேக்கனாமிர்தம் 6

Image
  Ekanathji ,  As I saw Him ஸ்ரீ ஏகநாத் ரானடே கன்யாகுமரி கடல் நடுவே விவேகானந்தர் பாறை நினைவுச் சின்னம் நிர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகித்தவர். விவேகானந்த கேந்திரம் நிறுவியவர். பெங்களூரு விவேகானந்த கேந்திரத்தின்  ‘விவேக சிஞ்சனா’ இரு மாத – இரு மொழி இதழில் அவர் பற்றி நான் எழுதி வெளியான கட்டுரை. Chennai is a major publication centre for Vivekananda Kendra. VIVEKANANDA KENDRA PATRIKA, the thematic half yearly English magazine and YUVA BHARATI, the monthly English magazine are brought out from the Thiruvallikeni office of the Kendra since 1972. As a cub journalist, I assisted the VKP editorial team of 1978 - 80 in a humble way in bringing out three consecutive issues with themes ‘The Indian Renaissance’, ‘Poverty’ and ‘Christianity’. That period provided me with several opportunities to interact briefly with Ekanthji Ranade, the Editor. ** On one occasion, when Ekanathji was present at our editorial staff meet, the discussion focussed on how to present ideas diligently r...

லேக்கனாமிர்தம் 5

Image
           “ கலந்த சாதம் , வகைக்கு  ஒன்று … பார்சல்!”   இன்று ( ஆகஸ்ட் 3) ஆடிப்பெருக்கு .   அதாவது ஆடி பதினெட்டு. சிறு பிராய ஞாபகங்களின்   வரிசையும் மனக்கண் முன் நீள்கிறது: ஒரே தெருக்காரர்களான 5, 6 குடும்பத்தினர் ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக சித்திரான்னம் எனப்படும் விதவித கலவை சாதம் கட்டிக்கொண்டு காவிரியை அல்லது தாமிரபரணியை அல்லது பக்கத்தில் உள்ள ஏதாவது ஒரு நதியை நோக்கி நடையைக் கட்டுவார்கள். அல்லது வண்டி கட்டுவார்கள்.   ஆற்றங்கரை மணல் பரப்பில் அன்று ஒரு வேளை சாப்பாடு அத்தனை பேருக்கும் பொது. ஆனால் அவரவர் வீட்டில் சமையல் செய்து எடுத்து வந்து பகிர்வார்கள். எந்த வீட்டில் இருந்து என்ன கலவை சாதம் என்று முன்கூட்டியே   பேசியிருப்பார்கள்.   காலங்காலமாக நதியைப் பெண்ணாகப் போற்றும் நமது தொன்மை நாகரீகம் காரணமாக அன்றைய தினம் ஆற்றை வழிபடுவார்கள்.   அடுத்து   கட்டுச்சோற்றை ஒரு கட்டுக் கட்டுவார்கள். எல்லாவற்றுக்கும் இடையில் ’கம்புக்கும் காவல் , தம்பிக்கும் பெண் பார்த்த’ படலங்களும் அரங்கேறும். ஆற்றங்கரையில் சித்திரான்னம் ப...

லேக்கனாமிர்தம் 4

Image
  ஊர் காணாத தேர் பவனி “ தாத்தா , உங்க வாழ்க்கைய பத்தி சொல்லுங்க ளேன்” என்று எட்டாம் வகுப்பு படிக்கும் என் பே த்தி கேட்டா ள். அதற்கென்ன , தோ சொல்றேன் என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டேன் . பே த்தி கேட்டது பே ட்டி என்று நினைத்து விட்டேன் . “ நீங்க செஞ்சதை எல்லாம் வருஷ வாரியா சொல்லுங்க போதும் .  'உன் குடும்பத்தில் உள்ள மிக மூத்தவரின் வாழ்க்கை யை டைம் லைன் ஆக எழுதிக் கொண்டு வா' என்று வீட்டுப்பாடம் கொடுத்திருக்கிறார் கள்” எ ன்று என் பேத்தி வி ளக்கவே , வருஷங்களை ஞாபகப்படுத் திக் கொள்ள மூளையை க் குடைந்து கொள்ளலா னேன். பி றந்த ஆண்டு (1945), மூன்றாம் வருட ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முடித்த ஆண்டு (1971), திருமணம் நடந்த ஆண்டு (1977),   எ ன்று இவற்றை மையமிட்டு   மற்ற நிகழ்வுகளை பட்டியலிட்டேன் . கு றி த்துக்கொண்ட பேத்தி குதித்தோடி னா ள் .    பொதிகையில் 'எந்தையும் தாயும்' வழங்கும் மகாதேவன்  பே த்தி யைப் போல பழைய நினைவுகளை கிளற ஒரு வாய்ப்பு அளித்தது தொலைக்காட்சி . இன்றைய ‘ டி டி தமிழ் ’ தொலைக்காட்சி ‘ பொதிகை ’ யாக இருந்த போது 2017 ல் ‘ எந்தையும் தாயும் ’ என...

லேக்கனாமிர்தம் 3

Image
தம்பதியாக திருப்பணி செய்யும் நமது இந்த  சகோதர சகோதரிகளை வாழ்த்துவோமா ? பாரத சமுதாயத்தில் குடும்பம் தான் அடிப்படை அ ல கு (basic unit). குடும்பத்துக்கு அடிப்படை அல்லது வேர் திருமணம் . நமது நாட்டில் தேசம் , தெய்வம் , தர்மத்தைக் காக்க கணவனும் மனைவியும் இணை ந்து பணி புரிய வேண்டும் என்பதுதான் திருமணத்தின் நோக்கமே . இந்த நோக்கத்தை வாழ்ந்து காட்டக்கூடியவர்கள் உ ண்டா ? தேடினால் கிடைக்கிறார்கள் . அப்படி நான் தேடியதில் கிடை த்த ஐந்து தம்பதிகளை இந்த ‘ லே க் க னா மிர்தம் ’ இடுகை அறிமுகப்படுத்துகிறது . ‘த ம்பதி திருப்பணி ’ என்ற தலைப்பிட்டு முகநூ லி ல் mahadevan sankaranarayanan என்ற முகவரியில் வரிசையாக எழுதி வந்தேன் . அதிலிருந்து ஐந்து தம்பதிகளை இதோ சந்தியுங்கள் .    டி.கே. ஹரி, ஹேமா வேதம், சமஸ்கிருதம், ஆயுர்வேதம், யோகா … என உலகை உயர்த்தும் பாரத ஞானக் கருவூலத்தை நாடி வரும் உலகம், கருவூலத்தின் சாவி யாரிடம் இருக்கிறது என்று தேடினால் சென்னை தம்பதி டி கே ஹரி - ஹேமா இதோ எங்களிடம் இருக்கிறது என்பார்கள். 20 ஆண்டுகள் வரை ஐ டி துறையில் பணிபுரிந்து விட்டு உலகின் பல கலாச்சாரங்களையும் கண்டப...